Published : 26 Aug 2021 02:53 PM
Last Updated : 26 Aug 2021 02:53 PM

தலிபான்கள் வெற்றி; பாகிஸ்தானின் பங்கு எதுவும் இல்லை: சபிஹூல்லா

பாகிஸ்தானுடனான உறவை மேலும் வலுப்படுத்த நாங்கள் எதிர் நோக்கியுள்ளோம் என்று தலிபான்கள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சபிஹூல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித் கூறும்போது, “நாங்கள் இஸ்லாம் மற்றும் அனைத்து ஆப்கன் மக்களுக்கான அரசை நிறுவ நினைக்கிறோம். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. மதம் என்று வரும்போது நாங்கள் பாரம்பரியமாக இணைந்திருக்கிறோம், இரு நாட்டு மக்களும் ஒருவருக்கொருவர் கலக்கிறார்கள். எனவே பாகிஸ்தானுடனான உறவை மேலும் வலுப்படுத்த நாங்கள் எதிர் நோக்கியுள்ளோம். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதில் எந்த பங்கும் பாகிஸ்தானுக்கு இல்லை.

இந்தியாவுடன் நாங்கள் நல்ல நட்புறவை பேண விரும்புகிறோம். பிற நாடுகளுக்கு எதிராக ஆப்கன் மண்னை பயன்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று தெரிவித்தார்.

பின்னணி

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறினார். ஆப்கனில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குப் பின்னரும் கூட ஆப்கானிஸ்தானில் இருந்து மக்கள் வெளியேறலாம் என தலிபான்கள் பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x