Published : 21 Aug 2021 07:00 AM
Last Updated : 21 Aug 2021 07:00 AM

முகநூலில் அதிகம் பேர் பார்த்த குரு கோபால் தாஸின் உரை

சுவாமி கவுர் கோபால் தாஸ்

வாஷிங்டன்

அமெரிக்க மக்களின் முகநூல் பதிவுகளில், அதிகம் பார்க்கப்பட்ட பதிவு குறித்த அறிக்கையை முகநூல் நிறுவனம் முதல் முறையாக வெளியிட்டுள்ளது.

இதில் இந்திய குரு, கவுர் கோபால் தாஸின் ‘மூன்று வார்த்தை நிஜம்’ என்ற ஆளுமைத் திறன் தொடர்பான உரை முதலிடம் பெற்றுள்ளது.

சமூக ஊடக தளங்களில் வலதுசாரி கருத்துகள் அதிகம் பகிரப்படுவதாக விமர்சகர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில் இந்த உள்ளடக்க அறிக்கை வெளியாகியுள்ளது. அரசியல் பதிவுகளை விட மீம்ஸ்கள், வைரஸ் சவால்கள், உயிரற்ற கேள்விகள் ஆகியவை ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.

முகநூல் அறிக்கையின்டி, கவுர் கோபால் தாஸின் “நீங்கள் பார்க்கும் முதல் 3 வார்த்தைகள் உங்கள் நிஜம்” என்ற தலைப் பிலான உரை 8.6 கோடி மக்களால் பார்க்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பிறந்த கோபால் தாஸ், பொறியியல் படிப்புக்கு பிறகு அமெரிக்க நிறுவன பணியில் சேர்ந்தார். 1996-ல் அப் பணியிலிருந்து விலகிய அவர், இஸ்கான் அமைப்பில் சேர்ந்தார். இவர் தன்னை, தனிப்பட்ட பயிற் சியாளர், துறவி, எழுத்தாளர், ஊக்கமூட்டும் பேச்சாளர் என அழைத்துக் கொள்கிறார்.

சுவாமி கோபால் தாஸை தொடர்ந்து, இசைக்கலைஞர் ஏஸ் குட்டாவின் பதிவு 6.14 கோடி பார்வையாளர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 2021 ஏப்ரல் 1 முதல் 2021 ஜூன் 30 வரையிலான 3 மாத கால தரவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x