Published : 23 Feb 2016 10:22 AM
Last Updated : 23 Feb 2016 10:22 AM
மும்பை தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் இந்தியாவுக்கு ஊடுருவ பயன்படுத்திய படகை ஆய்வு செய்யக் கோரி பாகிஸ்தான் அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2008 நவம்பரில் மும்பைக் குள் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் உயிரிழந்தனர்.
தாக்குதல் நடத்திய தீவிர வாதிகள் பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து கடல் மார்க்கமாக படகில் இந்தியாவுக்குள் ஊடுருவி இருப்பது தெரியவந்தது. இது தொடர்பான வழக்கு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
தீவிரவாதிகள் பயன்படுத்திய தாகக் கூறப்படும் ‘அல் பயாஸ்’ என்று பெயரிடப்பட்ட படகு கராச்சி துறைமுகத்தில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்தப் படகின் உரிமை யாளர் உட்பட சிலர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இப்படகை ஆய்வு செய்ய விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு தரப்பில் விசாரணை நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டது. ஆனால் இதனை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
இதை எதிர்த்து பாகிஸ்தான் அரசு தற்போது உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தரப்பு வழக்கறிஞர் சவுத்ரி ஆகார் கூறியபோது, மும்பை தாக்கு தலுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் படகை ஆய்வு செய்ய விசாரணைக் குழுவை நியமிக்கக் கோரி மனு தாக்கல் செய்துள் ளோம். இம்மனு விரைவில் விசா ரணைக்கு வர உள்ளது என்றார்.
மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT