Published : 31 Jul 2021 09:59 PM
Last Updated : 31 Jul 2021 09:59 PM
பாகிஸ்தானில் தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத் துறை தரப்பில், “ பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நோய்த் தொற்று 8% ஆக அதிகரித்துள்ளது. சிந்து பகுதியில் தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானில் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிந்து மாகாணத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கு பகுதி நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
டெல்டா கரோனா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் தொற்று அதிகரித்து வருகிறது. பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் அதுவே எதிரொலிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19 கோடியைக் கடந்துள்ளது.
அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 17 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT