Published : 21 Jul 2021 01:29 PM
Last Updated : 21 Jul 2021 01:29 PM

தென்கொரியாவில் அதிகரிக்கும் கரோனா

தென்கொரியாவில் கரோனா தொற்று தொடர்ந்து மீண்டும் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து தென்கொரிய சுகாதாரத்துறை தரப்பில், “தென் கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,784 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனினும் சமூகப் பரவல் குறைவாக உள்ளது. பதிவு செய்யப்படும் தொற்றுகளில் 40% பேர் டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களே அதிக அளவில் நான்காம் அலையில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவில் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் அதுவே எதிரொலிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18 கோடியைக் கடந்துள்ளது. அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 16 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x