Published : 15 Jul 2021 05:51 PM
Last Updated : 15 Jul 2021 05:51 PM

ஆப்பிரிக்காவில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா

ஆப்பிரிக்காவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆப்பிரிக்க கண்டத்தின் பல நாடுகளிலும் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் இந்த வாரம் ஆப்பிரிக்காவில் கரோனா பரவல் 43% அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து வாரங்களாகவே கரோனா பலியும் அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க கண்டத்தில் இதுவரை 60 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தென் ஆப்பிரிக்கா, மொராக்கோ, துனிசியா, எத்தியோப்பியா, எகிப்து ஆகிய நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

கரோனாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் தடுப்பூசியைக் கொள்முதல் செய்வதில் உலக நாடுகளிடையே பெரும் வேறுபாடு நிலவுகிறது.

உலக அளவில் இந்தியா உட்பட பல நாடுகளில் கரோனா 2-ம் அலையின் வேகம் சற்று தணிந்துள்ள போதிலும் முற்றாக நீங்கவில்லை. அதேசமயம் ஒருசில நாடுகளில் அதன் தாக்கம் தீவிரமாகவே இருந்து வருகிறது.

கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x