Published : 14 Jul 2021 01:13 PM
Last Updated : 14 Jul 2021 01:13 PM
சிட்னியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிட்னி நகரில் கடந்த இரண்டு வாரங்களாகத் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும், தொற்றுப் பரவல் குறையவில்லை. இதனால் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிட்னி நிர்வாகத் தலைவர் தரப்பில், “நேற்று 97 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். முந்திய நாள் இந்த எண்ணிக்கை 89 ஆக இருந்தது. இந்நிலையில் கரோனா பரவலைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 வாரங்களுக்கு முன்னர் சிட்னியில் ஒன்றிரண்டு பேருக்குதான் டெல்டா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டது. தற்போது இந்த எண்ணிக்கை 1000-ஐ நெருங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் கரோனாவை தொற்றை பூஜ்ஜியமாக்கும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் தடுப்பூசிகள் மெதுவாகச் செலுத்தப்படுவதாக மருத்துவ நிபுணர்கள் விமர்சித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் இதுவரை 31 ஆயிரத்துக்கும் அதிகமான பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. 900 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT