சிங்கப்பூரில் குருத்வாரா திறப்பு நிகழ்ச்சியில் தலைப்பாகை அணிந்த பிரதமர்

லீ சியென் லூங்
லீ சியென் லூங்
Updated on
1 min read

சிங்கப்பூர் சிலாட் ரோடு பகுதியில் அமைந்துள்ள சீக்கிய மக்களின் புனித தலமான புதுப்பிக்கப்பட்ட குருத்வாராவை சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் திறந்து வைத்தார். அப்போது, சீக்கியர்களைப் போல தலைப்பாகை அணிந்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசும்போது ‘சத்  அகால்’ என்றுபஞ்சாபி மொழியில் சீக்கிய மக்களுக்கு வாழ்த்தும் வணக்கமும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் லீ சியென் லூங் பேசுகையில், ‘‘கரோனா தொற்று காலத்தில் சிங்கப்பூரில் உள்ள சீக்கிய குருத்வாராக்கள் இன, மத பேதமின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவின. பல மதங்களுக்கும் பொதுவான இடமாக சிலாட் ரோடு குருத்வாரா விளங்குகிறது. வழிபாட்டுத் தலங்கள் சிங்கப்பூர் சமூகத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. மக்கள் ஒருவருக்கொருவர் ஆதரவு அளித்து ஒற்றுமையுடன் திகழ அவை வழிவகுக்கின்றன’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in