Last Updated : 11 Dec, 2015 12:34 PM

 

Published : 11 Dec 2015 12:34 PM
Last Updated : 11 Dec 2015 12:34 PM

வான்வழித் தாக்குதலில் ஐ.எஸ். நிதித்துறை தலைவர் பலி: அமெரிக்கா தகவல்

கடந்த மாதம் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பின் நிதித் துறை தலைவர் அபு சலே கொல்லப்பட்டதாக அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது.

ஐ.எஸ். அமைப்பு காலூன்றி இருக்கும் இராக் மற்றும் சிரியா உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் நவம்பர் மாதத்தில் அமெரிக்கா தலைமையில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தலைவனும், அந்த அமைப்பின் நிதித்துறை தலைவனுமான அபு சலே கொல்லப்பட்டதாக பாக்தாத்திலிருந்து, அமெரிக்க ராணுவ செய்தித் தொடர்பாளர் கேர்னல் ஸ்டீவ் வார்ரன் வீடியோ கான்ப்ரன்ஸிங் ஒன்றில் உறுதிசெய்துள்ளார்.

ஐ.எஸ். இயக்கத்தின் மிகவும் மூத்த கை தேர்ந்த அபு சலே கொல்லப்பட்டதாக ஸ்டீவ் கூறிப்பிட்டார். எனவே சலே பலியானது அந்த இயக்கத்துக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அபு சலேவுடன் அவரது உதவியாளர்கள் இருவரும் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ். அமைப்பின் நிதி ஆதாரத்தை முதலில் ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்துகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x