Published : 21 Jun 2021 02:38 PM
Last Updated : 21 Jun 2021 02:38 PM

பயணத் தடையில் தளர்வுகள்: ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு

கரோனா பரவல் காரணமாக இந்திய உள்ளிட்ட சில நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையில் தளர்வுகளை ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகம் அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், “ தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா, இந்தியா போன்ற நாடுகளிகளிருந்து வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளிலிருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்தால் அனுமதிக்கப்பட்ட கரோனா தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களை போட்டுக் கொண்டவர்கள் அனுமதிக்கப்படுவர்.மேலும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் உரிய விசா பெற்றிருக்க வேண்டும். இந்த நடைமுறை ஜூன் 23 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் இதுவரை சினோஃபார்ம், பைஸர், ஸ்புட்னிக், கோவிஷில்ட் ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கி உள்ளது.

கரோனா பரவல் மீண்டும் குறைந்துள்ளதை தொடர்ந்து உலக நாடுகள் பலவும் பயணத் தடைகளை தளர்த்தி வருகின்றனர்.அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகம் இந்த தளர்வை அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x