Published : 17 Jun 2021 02:09 PM
Last Updated : 17 Jun 2021 02:09 PM
ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக டோக்கியோவில் கரோனா காரணமாக விதிக்கப்பட்டுள்ள அவசர நிலையை நீக்க ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ஏஎஃப்பி வெளியிட்ட செய்தியில், “ ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக டோக்கியோ அவசர நிலையை நீக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட உள்ளன. இந்த தளர்வுகள் ஜுன் 20 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. ஒலிம்பிக் போட்டிகளில் 10,000 பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா நான்காம் அலையின் பரவல் தீவிரமாக இருந்ததன் காரணமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஏப்ரல் மாதம் முதல் கட்டுபாடுகள் விதிக்கபட்டன. இந்த நிலையில் கரோனா குறைந்த நிலையில் கட்டுப்பாடுகளை தளர்க்க ஜப்பான் அரசு தயாராகி வருகிறது. ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23 ஆம் தேதி ஜப்பானில் தொடங்க உள்ளன.
உலகம் முழுவதும் கரோனா இரண்டாம் அலையின் தீவிரம் அதிகரித்தது. கடந்த சில மாதங்களாக கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நாடுகளில் கரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றன. இதன் காரணமாக உலக அளவில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
உலகம் முழுவதும் 17 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 37 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT