Published : 16 Dec 2015 10:01 AM
Last Updated : 16 Dec 2015 10:01 AM
ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டனை சேர்ந்த 3 விண்வெளி வீரர்கள் நேற்று ரஷ்ய ஏவுகணை மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர்.
அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான் உள்ளிட்ட 11 நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. கடந்த 1998 நவம்பர் 20-ம் தேதி முதல் இந்த ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆய்வு செய்து வருகின்றனர். 6 மாதங்களுக்கு ஒருமுறை வீரர்கள் சென்று திரும்புகின்றனர். கடந்த 2003-ம் ஆண்டில் அமெரிக்காவின் கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறியதில் இந்திய வம்சாவளி விண்வெளி வீரர் கல்பனா சாவ்லா உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
இதைத் தொடர்ந்து ரஷ்ய விண்வெளி மையத்தில் இருந்தே சர்வதேச விண்வெளி மையத்துக்கு வீரர்கள் அனுப்பப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் கஜகஸ்தான் பைகானூர் விண்வெளி மையத்தில் இருந்து சோயூஷ் ராக்கெட் மூலம் ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டனை சேர்ந்த 3 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்குச் சென்றனர்.
ரஷ்யாவைச் சேர்ந்த யூரி மெலன்சென்கோ, அமெரிக் காவைச் சேர்ந்த டிம் கோப்ரா, பிரிட்டனை (ஐரோப்பிய யூனியன்) சேர்ந்த டிம் பீக்கே ஆகியோரை சுமந்தபடி இந்திய நேரப்படி நேற்று மாலை 4 மணி அளவில் சோயூஷ் ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது. பைகானூரில் இருந்து புறப்பட்ட 7 மணி நேரத்தில் 3 வீரர்களும் சர்வதேச விண்வெளி மையத்தைச் சென்றடைந்தனர்.
பிரிட்டன் தரப்பில் இதுவரை யாரும் சர்வதேச விண்வெளி மையத்துக்குச் செல்லவில்லை. அந்தப் பெருமையை டிம் பீக்கே பெற்றுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT