Last Updated : 30 Dec, 2015 10:03 AM

 

Published : 30 Dec 2015 10:03 AM
Last Updated : 30 Dec 2015 10:03 AM

இந்திய நிறுவனம் ரூ.66 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

அமெரிக்க நிறுவனங்களின் மென் பொருளை திருடி பயன்படுத் திய இந்திய ஜவுளி நிறுவனம் ரூ.66 கோடி இழப்பீடு வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்தியப் பிரதேசம் போபாலை தலைமையிடமாகக் கொண்டு பிரதிபா சின்டெக்ஸ் லிமிடெட் ஜவுளி நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களின் மென் பொருளை திருடி பயன்படுத்தியதாக புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசா ரித்த நீதிமன்றம், பிரதிபா நிறு வனம் சம்பந்தப்பட்ட அமெரிக்க நிறுவனங்களுக்கு ரூ.66 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x