Published : 05 Jun 2021 07:57 PM
Last Updated : 05 Jun 2021 07:57 PM
அதிகபட்சமாக ஒரே நாளில் 6 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை புரிந்துள்ளதாக இத்தாலி அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இத்தாலியின் தடுப்பூசி குழு கூறும்போது, “வெள்ளிக்கிழமை மட்டும் இதுவரை இல்லாத அளவு 6 லட்சம் மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இத்தாலியில் இதுவரை 3.7 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கையில் ஐரோப்பாவில் இத்தாலி இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் ஜெர்மனி உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் இதுவரை 41% மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,557 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. 73 பேர் பலியாகி உள்ளனர்.
உலகம் முழுவதும் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றி வருகின்றன. மக்கள் மத்தியில் கரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டுசென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் கரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தியுள்ளன.
உலகம் முழுவதும் இதுவரை 10%க்கும் அதிகமான மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT