Published : 04 Jun 2021 05:38 PM
Last Updated : 04 Jun 2021 05:38 PM

சீனாவில் புதிதாக 24 பேருக்கு கரோனா

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சீன சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் கரோனா உறுதிப்படுத்தப்பட்டது.

சீனாவில் இதுவரை 91,194 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 4,636 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இதுவரை 60 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது சீனாவில் தாமதமாகத்தான் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. கடந்த ஒரு மாதமாகத் தடுப்பூசி செலுத்துவதை சீனா தீவிரப்படுத்தியுள்ளது.

சீனாவில் சினோபார்ம், சினோவாக் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. சீனத் தடுப்பூசிகளை அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு சில நாட்களுக்கு முன் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x