Published : 03 Jun 2021 01:32 PM
Last Updated : 03 Jun 2021 01:32 PM

பிரேசிலில் இதுவரை 10 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன: சுகாதாரத் துறை

பிரேசிலில் 10 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகளுக்கு மேல் செலுத்தப்பட்டுள்ளது என்று அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை தரப்பில், “ பிரேசிலில் தற்போதுவரை சுமார் 10 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. மக்கள் தொகையில் 21 % மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து கரோனா தடுப்பூசிகளை செலுத்துவதை அதிகரித்து வருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசிலில் மீண்டும் கரோனா பாதிப்பு பிரேசிலில் அதிகரித்துள்ளது. பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா கரோனா வைரஸ் விவகாரத்தைச் சரியாகக் கையாளவில்லை என்றும், அவரது அரசியல் அணுகுமுறை காரணமாக பிரேசிலில் லட்சக்கணக்கான மக்கள் கரோனாவுக்குத் தங்கள் உயிரை பலி கொடுத்துள்ளனர் என்றும் பிரேசில் சமூக ஆர்வலர்களும், எதிர்க்கட்சிகளும் கடந்த ஓராண்டுக்கும் மேலாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

உலக அளவில் கரோனா பாதிப்பினால் அதிக பலி ஏற்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும் , பிரேசில் இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன. பல்வேறு நாடுகளில் கரோனா பரவல் இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளன. இதனைத் தடுக்க கரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x