Published : 31 May 2021 07:43 PM
Last Updated : 31 May 2021 07:43 PM

கரோனா தடுப்பூசி போடாதவர்களுக்குக் கட்டுப்பாடுகள்: ஹாங்காங்

கரோனா தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ளாதவர்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்க ஹாங்காங் அரசு முடிவு செய்துள்ளது.

ஹாங்காங்கில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று குறைந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனா ஐந்தாவது அலை தாக்குவதைத் தடுப்பதற்கான முயற்சியில் ஹாங்காங் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

அதன் ஒரு நடவடிக்கையாக கரோனா தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ளாதவர்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்க ஹாங்காங் அரசு முடிவு செய்துள்ளது.

அதன்பொருட்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், ஓட்டல்கள், சினிமா அரங்குகள், பொது நிகழ்ச்சிகள், கல்லூரிகளுக்குச் செல்ல ஹாங்காங் அரசு அனுமதி மறுத்துள்ளது. இதனை ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஹாங்காங்கில் இதுவரை 11 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். இதுவரை 18% மக்களுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்கு ஆற்றி வருகின்றன. மக்கள் மத்தியில் கரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டு சென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளன. பல்வேறு நாடுகளில் கரோனா பாதிப்பு இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. இதனைத் தடுக்க கரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

உலகம் முழுவதும் 17 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x