Published : 31 May 2021 05:25 PM
Last Updated : 31 May 2021 05:25 PM

இதுவரை 60 கோடிக்கும் அதிகமான மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: சீனா

சீனாவில் ஞாயிறு நிலவரப்படி 60 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “ஞாயிற்றுக்கிழமை வரை சீனா முழுவதும் 60 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மே மாதம் முதல் சராசரியாக ஒரு நாளைக்கு 1.2 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இத்துடன் உலக நாடுகளுக்கும் கரோனா தடுப்பூசியை சீனா ஏற்றுமதி செய்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற நாடுகளை ஒப்பிடும்போது சீனாவில் தாமதமாகத்தான் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. கடந்த ஒரு மாதமாகத் தடுப்பூசி செலுத்துவதை சீனா தீவிரப்படுத்தியுள்ளது.

சீனாவின் ஹிபி, அன்ஹு போன்ற பகுதிகளில் கரோனா தீவிரமடைந்ததைத் தொடர்ந்து தடுப்பூசிகள் செலுத்தும் பணியை அந்நாடு தீவிரப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் சினோபார்ம், சினோவாக் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. சீனத் தடுப்பூசிகளை அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு சில நாட்களுக்கு முன் அனுமதி அளித்தது.

உலகம் முழுவதும் 17 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். 35 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x