Published : 22 May 2021 06:38 PM
Last Updated : 22 May 2021 06:38 PM

ரஷ்யாவில் 50 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,709 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50 லட்சத்தை நெருங்குகிறது.

இதுகுறித்து ரஷ்ய சுகாதாரத் துறை தரப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் 8,708 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49,92,554 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மட்டும் 386 பேர் பலியாக, நாட்டின் மொத்த பலி எண்ணிக்கை 1,18,125 ஆக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் 10%க்கும் மேலாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

தடுப்பூசியைக் கொள்முதல் செய்வதில் உலக நாடுகளிடையே பெரும் வேறுபாடு நிலவுகிறது. வளர்ந்த, வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களது தேவைக்கு அதிகமாகத் தடுப்பூசிகளை வாங்கி வைத்துள்ளன. ஏழை நாடுகளோ தடுப்பூசி கிடைக்காமல் திணறி வருகின்றன.

இந்த நிலையில் கரோனா தடுப்பூசி காப்புரிமையை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று அறிவியல் விஞ்ஞானிகள், உலகத் தலைவர்கள் பலரும் வலியுறுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x