Published : 22 May 2021 05:16 PM
Last Updated : 22 May 2021 05:16 PM

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம்: எகிப்தின் முயற்சிக்கு ஐ.நா. வரவேற்பு

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்படுவதை உறுதிப்படுத்த எகிப்து எடுத்திருக்கும் முயற்சிக்கு ஐ.நா. சபை வரவேற்பு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த சில நாட்களாக ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே போர் நிறுத்தம் கடந்த வியாழக்கிழமை அன்று அமலுக்கு வந்தது.

இந்த நிலையில் இரு தரப்புக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்படுவதை உறுதி செய்யும் பொருட்டு தங்கள் நாட்டுப் பிரதிநிதிகளை இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் எகிப்து அனுப்பியுள்ளது. இதனை எகிப்தின் அரசு ஊடகமான மினா உறுதிப்படுத்தியுள்ளது. எகிப்தின் இந்த முயற்சியை ஐ.நா. சபை வரவேற்றுள்ளது.

நடந்தது என்ன?

இஸ்லாமியர்களும் யூதர்களும் தங்களது புனித இடமாகக் கருதும் கிழக்கு ஜெருசலேம் பகுதியில் சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலியர்கள் பலர் காயமடைந்தனர். இதற்கு பதிலடியாக காசா முனை மீது இஸ்ரேல் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது. இதனை அடுத்து இரு தரப்பும் மாறி மாறி ஏவுகணைத் தாக்குதலை நடத்தின.

மே 10-ம் தேதி முதல் இஸ்ரேல் ராணுவத்தினர் காசா மற்றும் மேற்குக் கரை பகுதியில் தாக்குதல் நடத்தினர். இதில் 200க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். இந்த நிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x