Last Updated : 20 Dec, 2015 12:30 PM

 

Published : 20 Dec 2015 12:30 PM
Last Updated : 20 Dec 2015 12:30 PM

பிரமிக்க வைக்கும் ஆஸ்திரேலியா - 18

அபாரிஜின்கள் பல விதங்களிலும் அவமானப்படுத்தப்பட்டார்கள். தேசியக் கணக்கெடுப்பில் இவர்கள் அடங்க மாட்டார்கள் என்று ஒரு காலத்தில் சட்டம் இயற்றப் பட்டது. ‘நாட்டின் தொன்மை யான விலங்குகள்’ என்ற தலைப் பில் இவர்களின் எண்ணிக்கை சேர்க்கப்பட்ட அராஜகமும் ஆஸ்தி ரேலிய சரித்திரத்தில் உண்டு.

இந்த அடாவடித்தனத்துக்கு சிகரம் வைத்தது போல் அமைந்த நிகழ்வு ஒன்றும் அரங்கேறியது.

‘‘திருடப்பட்ட குழந்தைகள்’’ (Stolen child) என்ற ஆஸ்திரேலிய அரசின் திட்டம் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளான ஒன்று. அது கடும் கண்டனத்துக்கு உள்ளானது. அபாரிஜின் இனக் குழந்தைகளின் ஒரு பகுதியினரை அரசு ‘கடத்தி’ தங்கள் பொறுப்பில் வைத்துக் கொண்டது. இது அந்தக் குழந்தைகளைப் பாதுகாக்கும் முயற்சி என்று அரசு கூற, இதை ஒருவகை இனப்படுகொலை என்றே வர்ணித்தனர் பலர். அபாரிஜின் இனத்தை அழிக்கும் முயற்சி என்றனர். முக்கியமாகக் கூட்டுக் குழந்தைகளை (வெள்ளை யருக்கும், அபாரிஜின் இனத்தவ ருக்கும் பிறந்தவை) கலாச்சார சவால்கள் என்றே அரசுத் தரப்பில் குறிப்பிட்டனர் சில அரசியல் வாதிகள். இப்படிப்பட்டவர்களை சமூகத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்கள்.

அபாரிஜின்கள் எனப்படும் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் ஆங்கிலேயர்களால் துப்பாக்கி முனையில் அவர்கள் இருப்பிடங் களிலிருந்து அகற்றப்பட்டதைக் கண்டோம். இந்த நடவடிக் கையின்போது பழங்குடி மக்களில் பலரும் இறந்தனர்.

1910 முதல் 1969 வரை பழங்குடி இனங்களைச் சேர்ந்த குழந்தைகள் தங்கள் குடும்பங் களிலிருந்து கட்டாயமாக பிரித் தெடுக்கப்பட்டனர். காவல் துறை யும், சமூகநல சேவகர்கள் என்று கூறிக் கொண்ட சிலரும் இணைந்து செய்த செயல் இது. இப்படிப்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள். இந்தச் சிறுவர்கள் கிறிஸ்தவ ஆலயங்களிலும் சமூகநல அமைப் புகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு வளர்ந்தனர். ஒரு சிலரை வெள்ளை இன மக்கள் தத்து எடுத்துக் கொண்டனர்.

இந்த அராஜகச் செயலை ‘‘இனங்களை ஒருங்கிணைக்கும் கொள்கை’’ என்று கூறிக் கொண் டனர். மனித உரிமையாளர்கள் இதைத் தொடர்ந்து எதிர்க்கத் தொடங்கினர்.

‘‘அவர்களை மீண்டும் வீட்டுக் குக் கொண்டு வாருங்கள்’’ (Bring them home) என்ற கண்டனக் குரல் வலுப் பெற்றது. 1995 மே, 11 அன்று இது உச்சமடைந்தது. இவர்கள் நடத்திய விசாரணையில் பல பழங்குடியினரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. விசாரணை அமைப்பு சில பரிந்துரைகளை வெளியிட்டது. பிரிக்கப்பட்ட தலைமுறைக்குப் புதிய வாழ்வை அளிக்க வேண்டும், இப்படிப்பட்ட வரலாற்றுத் தவறைச் செய்த அரசு மன்னிப்பு கோர வேண்டும் என்பவை அவற்றில் சில.

ஆனால் அப்போதைய ஆஸ்தி ரேலிய பிரதமர் ஜான் ஹவார்ட் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். மன்னிப்பு கேட்டால் நஷ்ட ஈடு அளிக்க வேண்டியிருக்குமே என்பதும் ஒரு காரணம்.

ஆனால் ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்கள் தங்கள் சட்டப்பேரவைகளில் மன்னிப்பு கோரின. கேவின் ரட் என்பவர் 2007 டிசம்பர் அன்று பிரதமராக பதவியேற்றார். (2010 ஜூன் வரை பதவி வகித்தார். பின்னர் 2013 ஜூன் 27 முதல் செப்டம்பர் 18 வரை பிரதமராக இருந்தார்). இவரது தலைமையிலான தொழிற்கட்சி 2007-ல் தனது அரசு ‘குழந்தை களைத் திருடிய’ செயலுக்காக மன்னிப்பு கோரும் என்று அறிவித்தார். 2008 பிப்ரவரி 13 அன்று ‘‘அபாரிஜின்களுக்குத துன்பங்கள் ஏற்படுத்துவதுபோல் அமைந்த அரசின் கொள்கைகள், சட்டங்கள் ஆகியவற்றுக்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்’’ என்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்னிப்பு கோரியபோது ‘ஆஸ்திரேலியாவின் ஆத்மாவில் படிந்த ஒரு கறையை நீக்குவதாக’ கூறினார். அப்போது அந்த நாட்டின் முன்னாள் பிரதமர்கள் பால் கீட்டிங், பாப் ஹாக், கோவிட்லாம் மற்றும் மால்கம் பிரேஸர் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

எதிர்க்கட்சித் தலைவரான ப்ரெண்டென் நெல்சன் என்பவர் ‘மற்றவர்கள் நிலையில் நம்மை வைத்துப் பார்த்தால்தான் பாதிப்புகளை உணர முடியும். பழங்குடியின மக்களின் மொழி, அறியாமை போன்றவற்றை நாம் அறிய மாட்டோம். மன்னிப்பை மனமாறக் கோருகிறோம்’ என்றார்.

அது சரி, இப்படிக் குழந்தைகளைத் திருடுவதால் அரசு எதை சாதிக்க நினைத்தது? காலப்போக்கில் அபாரிஜின்கள் என்ற இனமே இல்லாமல் செய்ய முடியுமே. உடனடிப் பலனாக அவர் களின் தனித்துவமான பேச்சு வழக்கு களையும் சடங்குகளையும் இல் லாமல் செய்ய முடியும். (ஏனென் றால் புதிய சூழலில் வளரும் இக்குழந்தைகள் அவற்றை அறிய முடியாமல் போகும்).

இந்தக் குழந்தைகளில் சிலர் ஆங்கிலேயர்கள் ஆளும் பிற நாடுகளுக்கும் அனுப்பப்பட்டனர்.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x