

ஆப்கானில் இன்று அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் முறைகேடுகள் நடந்ததால், அந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் போர் பதற்றம் நிலவும் வேளையில், அந்நாட்டு அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் இன்று நடைபெறுகிறது. தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்காமல் புறக்கணிக்க வேண்டும் என்று தாலிபான்கள் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், அங்கு சுமார் 4 லட்சம் பாதுகாப்பு வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த தேர்தலில், அதிபர் பதவிக்காக அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா அப்துல்லா மற்றும் உலக வங்கியின் முன்னாள் அதிகாரி அர்ஷப் கானி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட தேர்தலில், 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவானாலும், அதில் பல முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து நடைபெற்ற தேர்தல் ரத்து செய்யப்பட்டு, வாக்கு எண்ணிக்கைகள் நிறுத்தப்பட்டு, மறு தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது.