Last Updated : 18 Dec, 2015 10:16 AM

 

Published : 18 Dec 2015 10:16 AM
Last Updated : 18 Dec 2015 10:16 AM

முக்கிய பதவிக்கு இந்தியரை பரிந்துரைத்த அமெரிக்க அதிபர் ஒபாமா

அமெரிக்காவின் ஆள் கடத்தல் தொடர்பான ஆலோசனை கவுன்சி லுக்கு இந்திய-அமெரிக்கரான ஹரோல்டு டிசவுசா உட்பட 10 பேர் அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா பரிந்துரை செய்துள்ளார். சமூக ஆர்வலரான டிசவுசா குஜராத் மாநிலம் வடோதராவைச் சேர்ந்தவர் ஆவார்.

இதுகுறித்து ஒபாமா கூறும் போது, “டிசவுசா போன்ற திறமை யானவர்கள் நம் நாட்டின் முன்னேற்றத்துக்காக பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். இவர்களது திறமையும், நிபுணத் துவமும் இந்த அமைப்புக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். இவர் களுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன்” என்றார்.

இந்த கவுன்சில் ஆள் கடத்தலை கண்காணிப்பது மற்றும் தடுப்பது தொடர்பாக அரசுக்கு ஆலோசனை வழங்கி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x