Published : 13 May 2021 08:47 PM
Last Updated : 13 May 2021 08:47 PM

பிலிப்பைன்ஸில் கரோனா தொற்று 11,24,724 ஆக அதிகரிப்பு

பிலிப்பைன்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 6,385 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிலிப்பைன்ஸ் சுகாதாரத் துறை தரப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் 6,385 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸில் கரோனாவினால் பாதிக்கப்படுவர்களின் 11,24,724 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸில் கரோனா அதிகரித்து வருவதால் அங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க அரசு முடிவு செய்துள்ளது.

உலகம் முழுவதும் 15 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

தடுப்பூசியைக் கொள்முதல் செய்வதில் உலக நாடுகளிடையே பெரும் வேறுபாடு நிலவுகிறது.

வளர்ந்த, வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களது தேவைக்கு அதிகமாகத் தடுப்பூசிகளை வாங்கி வைத்துள்ளன. ஏழை நாடுகளோ தடுப்பூசி கிடைக்காமல் திணறி வருகின்றன.

இந்த நிலையில் கரோனா தடுப்பூசி காப்புரிமையை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று அறிவியல் விஞ்ஞானிகள், உலகத் தலைவர்கள் பலரும் வலியுறுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x