Published : 13 May 2021 04:15 PM
Last Updated : 13 May 2021 04:15 PM
தாய்லாந்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து தாய்லாந்து சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “ தாய்லாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,983 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 34 பேர் பலியாகினர். தாய்லாந்தில் கடந்த சில நாட்களாகவே கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. சிறைக் கைதிகளிடமும் கரோனா தொற்று அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் இதுவரை 93,794 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 518 பேர் பலியாகினர்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி லட்சக்கணக்கான மக்களின் உயிர்களைப் பறித்துள்ளது.
இதைத் தொடர்ந்து பல்வேறு முன்னேறிய நாடுகள் தடுப்பூசியைக் கண்டுபிடித்து அதை மக்களுக்குச் செலுத்தி வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்களது நாட்டு மக்களுக்கு தடுப்பூசியை வழங்கி வருகின்றன.
ஆனால் உலகில் உள்ள பல்வேறு நாடுகள் இன்னும் தடுப்பூசியின் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.குறிப்பாக ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளுக்கு தடுப்பூசி கிடைக்கவில்லை. அங்கு ஏராளமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வரும் அவல நிலை உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT