Published : 09 Dec 2015 10:07 AM
Last Updated : 09 Dec 2015 10:07 AM
நீண்ட கால அடிப்படையில் பருவநிலை மாறுபாடுகளை ஆய்வு செய்வதற்காக 8 புதிய சூழலியல் கண்காணிப்பு மையங்கள் இந்தியாவில் அமைக்கப்படும் என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
நீண்டகால சூழலியல் கண்காணிப்பகங்கள் (எல்இடிஓ) திட்டத்தை அறிமுகம் செய்து அவர் பேசியதாவது:
இந்தியாவில் வெவ்வேறு உயிர்ச்சூழல் பகுதியில் 8 சூழலியல் கண்காணிப்பகங்கள் அமைக்கப் படும். உலக மக்கள்தொகை யில் இந்தியாவில் 17 சதவீதம் பேர் உள்ளனர். உலகின் மொத்த மாடுகளில் 17 சதவீதம் இந்தியாவில் உள்ளன. பருவநிலை மாற்றம் அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. காற்று, நீர், தட்பவெப்பத்தை மட்டுமின்றி, பல்லுயிர்சூழலையும் பாதிக்கிறது. நீண்ட கால சூழலியல் பாதிப்புகளை மதிப்பிட, நீண்ட கால சூழலியல் கண்காணிப்பகங்கள் தேவை. இந்தியா அறிவியலில் நம்பிக்கை கொண்டுள்ளது.
8 கண்காணிப்பகங்கள் அமைக் கப்பட உள்ளன. இமயமலை, மேற்குத் தொடர்ச்சி மலை, மத்திய இந்தியாவிலிருந்து சுந்தரவனக் காடுகள் வரையும், ஜம்மு-காஷ்மீர் முதல் ராஜஸ்தான் மற்றும் குஜராத் வரையும் அமைக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT