Published : 08 May 2021 09:32 PM
Last Updated : 08 May 2021 09:32 PM

பைஸர் தடுப்பூசிக்கு இலங்கை அனுமதி

கரோனா பரவலைத் தடுக்க அவசரகால அடிப்படையில் பைஸர் தடுப்பு மருந்தை பயன்படுத்த இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து இலங்கை சுகாதார அமைப்பு கூறும்போது, “ இலங்கை கரோனாவின் மூன்றாம் அலையை எதிர்கொண்டு வருகிறது. இதனை எதிர்கொள்ள 50 லட்சம் பைஸர் தடுப்பு மருந்துகளை ஆர்டர் செய்துள்ளோம். பைஸர் தடுப்பு மருந்துகளை அவசர கால அடிப்படையில் பயன்படுத்த அனுமதியளிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக், சீனாவிம் சினோபார் ஆகிய தடுப்பூசிகளுக்கும் இலங்கை அரசு அனுமதி வழங்கி உள்ளது. அந்த வரிசையில் தற்போது பைஸர் தடுப்பு மருந்துக்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் இலங்கை 1,914 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் கரோனா இரண்டாம் அலையின் தீவிரம் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நாடுகளில் கரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றன.

உலகம் முழுவதும் 15 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x