Published : 08 May 2021 01:37 PM
Last Updated : 08 May 2021 01:37 PM

ஆப்கனில் கடந்த 5 வருடங்களில் வான்வழி தாக்குதலில் 1,600 குழந்தைகள் பலி: ஐ.நா. வேதனை

கடந்த 5 வருடங்களில் வான்வழித் தாக்குதலில் 1,600 குழந்தைகள் பலியாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில், “ ஆப்கானிஸ்தானில் கடந்த 5 ஆண்டுகளாக நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 40% மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில் குழந்தைகள் மட்டும் 1,600 பேர் பலியாகி உள்ளனர். ஆப்கானிஸ்தான் பல வருடங்களாக குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாக இருந்ததில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2001 ஆம் ஆண்டு முதல் ஆப்கான் கடந்து வந்த பாதை

2001-டிச 7- காந்தகாரில் இரு்ந்து முல்லா ஓமர் விலகிச் சென்றபின், தலிபான் ஆட்சி சீர்குலையத்தொடங்கியது.

2001-டிச 22- காபுல் நகருக்கு கர்ஸாய் வருகை. ஆப்கனை நிர்வகிக்கும் 29 உறுப்பினர்களுக்கும் கர்ஸாய் தலைவராகப் பொறுப்பேற்பு

2004-2009- ஆப்கனில் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு, அங்கு கர்ஸாய் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார்.

2014-ஏப்.5- ஆப்கானிஸ்தானில் நடந்த தேர்தலில் அஸ்ரப் கானி, அப்துல்லா அப்துல்லா இருவரும் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். அதன்பின் அதிகாரப்பகிர்வு அடிப்படையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி பேச்சுவார்த்தையில் அஷ்ரப் கானி அதிபராகவும், அப்துல்லா தலைமை நிர்வாகியாகவும் நியமிக்கப்பட்டனர்.

2015-2018- தலிபான்கள் மீண்டும் வலிமையாக உருவெடுத்து, நாள்தோறும் ஆப்கன் அரசுக்கும், அமெரிக்கப் படைகளுக்கும் எதிராகத் தாக்குதல் நடத்தினர். கிழக்குப்பகுதியில் ஐஎஸ் தீவிரவாதிகள் ஆதிக்கம் உருவாகியது, தலிபான்கள் பாதிக்கும் மேற்பட்ட நாட்டை கைப்பற்றினர்.

2018- செப்- அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்கப் படைகளை திரும்பப்பெறும் வகையில் தலிபான்களுடன் பேச்சு நடத்த அமெரிக்க அதிகாரி ஜல்மே கலிஜாத்தை நியமித்தார்

2019 செப்- ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் நடத்தப்பட்டு பலமாதங்கள் முடிவு அறிவிக்கப்படவில்லை.

2019, நவம் 24- ஆப்கானிஸ்தான் சென்று அமெரிக்கப் படைகளை அதிபர் ட்ரம்ப் பார்வையிட்டார். தலிபான்களுடன் அமைதி ஒப்பந்தம் குறித்த பேச்சை அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

2020, பிப்18- ஆப்கானிஸ்தான் தேர்தலில் அஷ்ரப் கானி வெற்றி பெற்றதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் அப்துல்லா தேர்தல் முடிவை ஏற்க மறுத்துவிட்டார்

2020, பிப்29- அமெரிக்கா, தலிபான் இடையே கத்தார் தலைநகர் தோஹாவில் அமைதி ஒப்பந்தம் கையொப்பமானது. அமெரிக்கப் படைகள் அடுத்த 14 மாதங்களில் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற முடிவு செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x