Published : 04 May 2021 06:00 PM
Last Updated : 04 May 2021 06:00 PM

தடுப்பூசியால் பிரேசிலில் கரோனா பலி குறைந்தது

பிரேசிலில் தடுப்பூசி செலுத்துவது அதிகரிக்கப்பட்டதால் கரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துள்ளன.

இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை தரப்பில், ''பிரேசிலில் கரோனா தடுப்பூசி செலுத்தும் சதவீதம் 14 ஆக இருந்தது. இந்த நிலையில் தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்தியதைத் தொடர்ந்து பிரேசிலில் கரோனா தொற்றால் ஏற்படும் இறப்புகள் குறைந்துள்ளன.

பிரேசிலில் கடந்த சில நாட்களாக கரோனா பலி எண்ணிக்கை 1000 வரை குறைந்துள்ளது. எனவே, தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க பைஸர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசிலில் ஜனவரி மாதம் முதலே கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இந்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் குறைந்துள்ளது.

உலக அளவில் கரோனா பாதிப்பினால் அதிக பலி ஏற்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன. பல்வேறு நாடுகளில் கரோனா பரவல் இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. இதனைத் தடுக்க கரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

உலகம் முழுவதும் 15 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x