Published : 01 May 2021 03:13 AM
Last Updated : 01 May 2021 03:13 AM

இந்தியாவுக்கு உயிர் காக்கும் கருவிகள் தருகிறது ஜப்பான்

டோக்கியோ

இந்தியாவுக்கு வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட உயிர் காக்கும் கருவிகளை ஜப்பான் வழங்க உள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. நாளொன்றுக்கு 3.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அதிகப்படி யான நோயாளிகளால் மருத்துவ மனைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக பலர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கரோனாவில் இருந்து மீள்வதற்காக இந்தியா வுக்கு அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, ஜெர்மனி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. மருந்துகள், மருத்துவ கருவிகள் உள்ளிட்டவற்றை வழங்குகின்றன.

இந்நிலையில், வைரஸ் பரவலை சமாளிப்பதற்காக இந்தியாவுக்கு 300 வென்டிலேட்டர்கள், 300 ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்களை வழங்க ஜப்பான் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவை ஒரு வாரக் காலத்துக்குள் இந்தியா வந்து சேரும் என ஜப்பான் தூதர் சட்டோஷி சுசூகி தெரிவித்தார்.

இதுகுறித்து ஜப்பான் அரசு வெளியிட்ட அறிக்கையில், “கரோனா வைரஸால் இந்தியா வில் ஏற்பட்டுள்ள நிலைமையை சரி செய்ய ஜப்பான் உறுதி யேற்றிருக்கிறது. அந்த வகையில் தற்போது சில மருத்துவ உபகரணங்கள் இந்தியாவுக்கு வழங்கப்படுகின்றன. எதிர்காலத்திலும் இந்தியாவுக்கு பல உதவிகள் வழங்கப்படும்" எனக் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x