Published : 29 Apr 2021 01:24 PM
Last Updated : 29 Apr 2021 01:24 PM

கரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டவர்கள் மூலம் தொற்றுப் பரவல் குறைவு: ஆய்வில் தகவல்

கரோனா தடுப்பூசியின் ஒரு டோஸை செலுத்திக் கொண்டால் அந்த நபர் வாயிலாக தொற்று பரவுவது குறைந்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரிட்டனில் உள்ள சுகாதார அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், “பைஸர், அஸ்ட்ராஜெனிகா ஆகிய கரோனா தடுப்பூசிகளின் முதல் டோஸை செலுத்திக் கொண்டவர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த ஆய்வின் முடிவில் முதல் டோஸ் எடுத்துக் கொண்டவர்களால் பிறருக்கு கரோனா பரவுவது 50%க்கும் மேலாகத் தடுக்கப்படுகிறது. இது நல்ல அறிகுறி. இந்த மருத்துவப் பரிசோதனையில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உட்படுத்தப்பட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்கு ஆற்றி வருகின்றன. கரோனா தடுப்பு மருந்தை பெருவாரியாகக் கொண்டு சென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளன. பல்வேறு நாடுகளில் கரோனா பாதிப்பு இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. இதனைத் தடுக்க கரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

உலகம் முழுவதும் 14 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x