Published : 21 Apr 2021 03:15 AM
Last Updated : 21 Apr 2021 03:15 AM

பிரிட்டனுக்குள் இந்தியர்கள் நுழைய தடை

பிரிட்டன் சுகாதாரத் துறை செயலாளர் மாட் ஹன்காக் நேற்று முன்தினம் கூறியதாவது:

இந்தியாவில் உருமாறிய கரோனா வேகமாக பரவி வருகிறது. இவ்வகை கரோனா பாதிப்பு பிரிட்டனில் 103 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இது மேலும் பரவுவதைத் தடுக்க, பயண தடை பட்டியலில் இந்தியாவும் சேர்க்கப்படுகிறது. இது ஏப்ரல் 23-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இதன்படி, பிரிட்டன், அயர்லாந்து குடியுரிமை பெறாதவர்கள் இந்தியாவில் இருந்து வர தடை விதிக்கப்படுகிறது. அதேநேரம் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர்கள் இந்தியாவில் இருந்து வந்தால் அவர்கள் 11 நாட்களுக்கு தங்கள் சொந்தசெலவில் ஓட்டல்களில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x