Published : 16 Apr 2021 09:15 PM
Last Updated : 16 Apr 2021 09:15 PM

மலேசியாவில் கரோனா பாதிப்பு 3,70,528 ஆக அதிகரிப்பு

மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,551 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 3,70,528 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மலேசிய சுகாதாரத் துறை தரப்பில், “ மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,551 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நாட்டில் கரோனா பாதிப்பு 3,70,528 ஆக அதிகரித்துள்ளது. மலேசியாவில் கரோனா பாதிப்பால் இதுவரை 1,365 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கரோனா பாதிப்பில் 227 பேர் மட்டுமே தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நாடுகளில் கரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றன.

உலகம் முழுவதும் சுமார் 13 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x