

துருக்கி கடல் பகுதியில் அகதிகள் பயணம் செய்த படகு மூழ்கியதில் 18 பேர் உயிரிழந்தனர். 14 பேர் உயிருடன் காப்பாற்றப்பட்டனர்.
உள்நாட்டுப் போர் தீவிர மடைந்துள்ள சிரியா, இராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடு களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி செல் கின்றனர். ஆபத்தான கடல் பயணம் மூலம் துருக்கி மற்றும் கீரிஸ் நாடுகளின் தீவுப் பகுதி களில் அவர்கள் கரையேறி வருகின்றனர்.
சிரியா, இராக்கை சேர்ந்த அகதிகள் கிரீஸ் நாட்டுக்கு மரப்படகில் பயணம் செய்தனர். அவர்கள் சென்ற படகு நேற்றுமுன்தினம் துருக்கி கடல் பகுதிக்கு வந்த போது தண்ணீரில் மூழ்கியது.
துருக்கி கடலோர காவல் படையினர் 14 பேரை காப்பாற்றினர். 18 பேர் சடலங் களாக மீட்கப்பட்டனர்.