Published : 05 Apr 2021 05:16 PM
Last Updated : 05 Apr 2021 05:16 PM

சிங்கப்பூரில் ஜூன் முதல் 45 வயது குறைந்தோருக்கும் கரோனா தடுப்பு மருந்து

45 வயதுக்குள்ளானவர்கள் அனைவருக்கு ஜூன் முதல் கரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

2021 -ம் ஆண்டுக்குள் அனைத்து மக்களுக்கு கரோனா தடுப்பூசியை செலுத்த சிங்கப்பூர் அரசு திட்டமிட்டு அதனை செயல்படுத்தி வருகிறது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ சிங்கப்பூர் மக்கள் தொகையில் 18% மக்களுக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. 4 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இரண்டு டோஸ்களையும் பெற்றுவிட்டன. 2021 -ம் ஆண்டுக்குள் அனைத்து மக்களுக்கு கரோனா தடுப்புமருந்து சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளது. ஜூனுக்கு பிறகு 45 வயதுக்கு கீழான அனைவருக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட உள்ளது.

கடந்த ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸால் உலகம் முழுவதும் 13 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

கரோனா தடுப்பு மருந்தை தடுக்க பைஸர், மாடர்னா, ஸ்புட்னிக், ஜான்சன் & ஜான்சன் ஆகிய தடுப்பு மருந்துகள் உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x