Published : 05 Apr 2021 12:54 PM
Last Updated : 05 Apr 2021 12:54 PM

இந்தோனேசியாவில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 55 ஆக அதிகரிப்பு

இந்தோனேசியாவில் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து இந்தோனேசிய பேரிடர் மேலாண்மை தரப்பில், “ இந்தோனேசியாவில் கிழக்குப் பகுதியில் கனமழையைத் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு எற்பட்டது. இந்த வெள்ளப் பெருக்கில் இதுவரை 55 பேர் பலியாகி உள்ளனர், 45 பேர் மாயமாகி உள்ளனர். தொடர்ந்து மோசமான வானிலை நிலவி வருவதால் மீட்புப் பணிகள் தொடருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனினும் மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

கனமழையால் தொடர்ந்த வெள்ளம் காரணமாக இந்தோனேசியாவில் பல்வேறு இடங்களில் வீடுகளும், பாலங்களும் அடித்து செல்லப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெள்ளப்பெருக்கு காரணமாக பல சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன என்று இந்தோனேசிய போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு 60 பேர் வரை பலியாகினர். 1 லட்சத்துக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x