Published : 30 Mar 2021 03:14 AM
Last Updated : 30 Mar 2021 03:14 AM
நேபாள ராணுவ செய்தித்தொடர்பாளர் சந்தோஷ் பல்லவ் பாடேல் நேற்று முன்தினம் தனது ட்விட்டர் பக்கத்தில், “கரோனா தொற்றுக்கு எதிரான போருக்கு உதவும் வகையில் நேபாள ராணுவத்துக்கு இந்திய ராணுவம் 1 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை பரிசாக வழங்கி உள்ளது” என பதிவிடப்பட்டுள்ளது.
கோவேக்ஸ் திட்டத்தின் கீழ், இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு வரும் மே மாதத்துக்குள் 19.2 லட்சம் தடுப்பூசிகள் அனுப்ப இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் 3.48 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் நேபாளத்துக்கு இந்த மாத தொடக்கத்தில் அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் 10 லட்சம் டோஸ்தடுப்பூசி ஏற்கெனவே அனுப்பப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT