Published : 20 Mar 2021 05:35 PM
Last Updated : 20 Mar 2021 05:35 PM
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில், “ பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமைதான் இம்ரான்கான் சீன நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டார். இந்த நிலையில் இம்ரான் கானுக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானில் 6 லட்சத்துக்கு அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,000க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
உருமாறிய கரோனா வைரஸ்
பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவியது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தின. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.
ஜான்சன் & ஜான்சன், ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT