Published : 18 Mar 2021 03:13 AM
Last Updated : 18 Mar 2021 03:13 AM

அமெரிக்காவில் 3 மசாஜ் பார்லர்களில் துப்பாக்கிச் சூடு: 8 பேர் உயிரிழப்பு; இளைஞர் கைது

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள மசாஜ் பார்லர்களில் நேற்று முன்தினம் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டா நகரில் உள்ளது அக்வொர்த் பகுதி. பொழுதுபோக்கு மையங்களுக்கு பெயர் போன இப்பகுதியில் ஏராளமான மசாஜ் பார்லர்கள் இயங்கி வருகின்றன. இந்த சூழலில், நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் அங்குள்ள 3 மசாஜ் பார்லர்களில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில், அந்த பார்லர்களில் இருந்த 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால், நேற்று காலை அவர்களும் உயிரிழந்தனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அட்லாண்டா போலீஸார், அக்வொர்த் நகரில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில், இளைஞர் ஒருவர் சம்பந்தப்பட்ட 3மசாஜ் பார்லர்களிலும் முகமூடி அணிந்து கொண்டு நுழைவது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸாரை கண்டதும் தப்ப முயன்ற அவரை, துரத்திச் சென்று கைது செய்துள்ளனர். விசாரணையில் அந்த இளைஞரின் பெயர் ராபர்ட் ஆரோன் லாங் (21) என்பது தெரியவந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x