Published : 09 Mar 2021 11:50 AM
Last Updated : 09 Mar 2021 11:50 AM

56% மக்களுக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்திய இஸ்ரேல்

இஸ்ரேலில் இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு கரோனா தடுப்பு மருந்து போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் சுகாதாரத் துறை தரப்பில், “இஸ்ரேலில் 50 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. அதாவது 56% மக்களுக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறும்போது, “அனைவரும் கரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். ஏப்ரல் மாதத்துக்குள்ளாக மக்கள்தொகையில் 16 வயதைக் கடந்த அனைவரும் கரோனா தடுப்பு மருந்தைப் பெறுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் பைஸர் கரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ஹலோசேட்டர் கரோனா தடுப்பு மருந்து மூன்றாம் கட்டப் பரிசோதனையில் உள்ளது. கரோனாவால் ஆபத்தான கட்டத்தில் இருந்த 20% நோயாளிகளுக்கு இந்தக் கரோனா தடுப்பு மருந்து பயன்பட்டது. இதில் 90% பேர் குணமடைந்துள்ளனர் என்று இஸ்ரேல் கடந்த வாரம் தெரிவித்தது.

உருமாறிய கரோனா வைரஸ்

பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

மாடர்னா, பைஸர், ஜான்சன் & ஜான்சன் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x