Published : 08 Nov 2015 11:20 AM
Last Updated : 08 Nov 2015 11:20 AM

தென்சீனக் கடல் சீனாவுக்கே சொந்தம்: அதிபர் ஜி ஜின்பிங் திட்டவட்டம்

தென்சீனக் கடல் பகுதி சீனாவுக்கே சொந்தம், அதில் யாரும் உரிமை கோர முடியாது என்று அந்த நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித் துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக தென்சீனக் கடலில் பல்வேறு செயற்கை தீவுகளை சீனா உரு வாக்கி வருகிறது. அந்தத் தீவுகளில் விமானத் தளம், துறைமுகம் ஆகியவை கட்டமைக்கப்பட்டு வருகின்றன.

சர்ச்சைக்குரிய பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல் அண்மை யில் ரோந்து பணியில் ஈடுபட்டது. இதற்கு சீன தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சிங்கப்பூரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் ஜி ஜின்பிங் பேசியதாவது:

தென் சீனக் கடல் பகுதி சீனாவுக்குச் சொந்தமானது. இது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை களுக்கு விரைவில் தீர்வு காணப்படும்.

சம்பந்தப்பட்ட கடல் பகுதியில் கப்பல்கள், விமானங்கள் கடந்து செல்ல கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று சில நாடுகள் அச்சம் தெரிவித் துள்ளன. அதுபோன்ற கட்டுப் பாடுகள், தடைகள் விதிக்கப்படாது.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x