Published : 12 Nov 2015 01:34 PM
Last Updated : 12 Nov 2015 01:34 PM

மியான்மர் தேர்தல்: 536 நாடாளுமன்ற இடங்களை கைப்பற்றிய ஆங் சான் சூச்சி கட்சி

மியான்மர் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சியான ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் இதுவரை 536 நாடாளுமன்ற தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. மியான்மர் தேர்தல் ஆணையம் இதுவரை நாடாளுமன்றத்துக்காக தேர்வு செய்யப்பட்ட 627 பிரதிநிதிகளை அறிவித்துள்ளது.

536 இடங்களில், பிரதிநிதிகள் சபையில் 179 இடங்களும், மேலவையில் 77 இடங்களும், மாநில அல்லது பிராந்திய நாடாளுமன்றத்துக்காக 280 இடங்களும் அடங்கும்.

ஆளும் கட்சிக்கு 51 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. மேலும் தேர்தல் முடிவுகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றிக்குப் பிறகு ஆங் சான் சூச்சி கூறும்போது, “அமைதியான முறையில் மீண்டும் நாட்டில் ஜனநாயக நடைமுறைகள் அமல்படுத்தப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x