Published : 03 Mar 2021 06:33 PM
Last Updated : 03 Mar 2021 06:33 PM

ஜப்பானில் உருமாறிய கரோனா அதிகரிப்பு: அவசர நிலை நீட்டிப்பு

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உருமாறிய கரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் அங்கு அவசர நிலை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜப்பான் சுகாதார மையம் தரப்பில், “ ஜப்பானில் கடந்த சில நாட்களாக உருமாற்றமடைந்த கரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. ஜப்பான் தலை நகர் டோக்கியோவில் நேற்று மட்டும் 121 பேருக்கு புதியவகை கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து டோக்கியோவில் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,11,797 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.

டோக்கியோவில் புதியவகை கரோனா அதிகரித்து வருவதை தொடர்ந்து அங்கு அவசர நிலையை நீட்டிக்க அரசு திட்டமிட்டு வருகிறது. ஜப்பானில் தற்போதுதான் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வருகிறது.

கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதார பாதிப்பைத் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 10 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x