Published : 03 Mar 2021 04:53 PM
Last Updated : 03 Mar 2021 04:53 PM

ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் துப்பாக்கிச் சூடு: ஊடகத்தில் பணிபுரியும் 3 பெண்கள் பலி

ஆப்கானிஸ்தானில் ஊடகத்தில் பணிபுரியும் மூன்று இளம் பெண்கள் தீவிரவாதிகளால் சுடப்பட்டு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத்தில் செயல்படும் எனிகாஸ் தொலைக்காட்சியில் பணிபுரியும் பெண்கள் பணி முடிந்து வீடு திரும்பும்போது துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 பெண்கள் பலியாகினர்.
இத்தாக்குதல் தொடர்பாக ஒரு நபர் கைது செயப்பட்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

கடந்த சில நாட்களாக பத்திரிகையாளர்கள், மத போதகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்படுவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையேயான பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் அமெரிக்கா தலைமையில் கத்தாரில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் முடிவில் அமெரிக்கப் படைகள் சிறிது சிறிதாக ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப் பெறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் கட்டமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரகள் திரும்பப் பெறப்பட்டனர்.

இருப்பினும் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. அவ்வப்போது குண்டுவெடிப்புச் சம்பங்களில் தலிபான்கள் ஈடுபடுவதும் தொடர்கதையாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x