Published : 03 Mar 2021 12:26 PM
Last Updated : 03 Mar 2021 12:26 PM

கரோனா தடுப்பு மருந்து போட்டுக் கொண்ட பீலே

பிரபல பிரேசில் கால்பந்து வீரர் பீலே கரோனா தடுப்பு மருந்தை போட்டுக் கொண்டார்.

கரோனா தடுப்பு மருந்து போட்டுக் கொண்டது குறித்து பீலே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,, “ இந்த நாளை என்னால் மறக்க முடியாது. நான் கரோனா தடுப்பு மருந்தை போட்டுக் கொண்டேன். கரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. நாட்டில் பலருக்கு கரோனா தடுப்பு மருந்து போடப்படாததால் நாம் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

பீலேவுக்கு போடப்பட்ட கரோனா தடுப்பூசி , முதல் டோஸா, இரண்டாவது டோஸா என்ற தகவல் வெளியாகவில்லை.

பிரேசிலில் ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன.

உருமாறிய கரோனா வைரஸ்

பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவியது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தின. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் பிரான்ஸில் கரோனா தொற்று தற்போது கட்டுக்குள் உள்ளது.

மாடர்னா, பைஸர், ஜான்சன் & ஜான்சன் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதில் பைஸர் கரோனா தடுப்பு மருந்து உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படுவதாக பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 11 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x