Published : 04 Mar 2021 04:35 PM
Last Updated : 04 Mar 2021 04:35 PM

60% ரஷ்யர்கள் ஸ்புட்னிக் தடுப்பு மருந்தை விரும்பவில்லை: ஆய்வில் தகவல்

சுமார் 60% ரஷ்யர்கள் ஸ்புட்னிக் கரோனா தடுப்பு மருந்தை போட்டுக் கொள்ள விரும்பவில்லை என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்புட்னிக் கரோனா தடுப்பு மருந்து சிறப்பாக செயல்படுகிறது என பல்வேறு நாடுகளுக்கு ரஷ்யா ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நிலையில் ஸ்புட்னிக் கரோனா தடுப்பு மருந்தை போட்டுக் கொள்ள 60% ரஷ்யர்கள் விரும்பவில்லை என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து லிவேடா மையம் நடத்திய ஆய்வில், “சுமார் 60% ரஷ்யர்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பு மருந்தை போட்டுக் கொள்ள விரும்பவில்லை. காய்ச்சல் மற்றும் சோர்வு ஆகியவை ஏற்படுவதால் ஸ்புட்னிக் கரோனா தடுப்பு மருந்து போட்டுக் கொள்ள தயங்குகின்றனர்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ரஷ்யாவில் 35 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். டிசம்பர் மற்றும் ஜனவரியை ஒப்பிடுகையில் பாதிப்பு குறைந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உருமாறிய கரோனா வைரஸ்

பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ், ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவியது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தின. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் பிரான்ஸில் கரோனா தொற்று தற்போது கட்டுக்குள் உள்ளது.

சினோபார்ம், ஜான்சன் & ஜான்சன், ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

உலகம் முழுவதும் 11 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x