Published : 24 Feb 2021 06:29 PM
Last Updated : 24 Feb 2021 06:29 PM

முதல் நபராக கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மலேசிய பிரதமர்

மலேசியாவில் கரோனா தடுப்பு மருந்து போடும் பணி தொடங்கியுள்ளது. முதலாவதாக அந்நாட்டு பிரதமர் முகைதீன் யாசினுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ மலேசியாவில் இன்று (புதன்கிழமை) முதல் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படுகிறது. முதல் நபராக மலேசிய பிரதமர் முகைதீன் யாசினுக்கு கரோனா தடுப்பு மருந்து போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுகாதார பணியாளர்களுக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட உள்ளது” என்றார்.

தடுப்பூசி போட்டு கொண்டது குறித்து முகைதீன் யாசினுக்கு கூறும்போது, “ நான் இந்த தடுப்பு மருந்து பாதுகாப்பாகவும், கரோனாவுக்கு எதிராக எதிர்வினையாற்ற கூடியதாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஆண்டுக்குள் சுமார் 80% மக்களுக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்த மலேசிய அரசு திட்டமிட்டுள்ளது.

ஊரடங்கை அறிவிக்காவிட்டால் நிலைமை மோசமாகும் என்று மருத்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து மலேசியா கடந்த மாதம் இரு வாரங்களுக்கு ஊரடங்கை அறிவித்தது.

சீனாவைத் தொடர்ந்து, பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ், ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது.

இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் சுமார் 11 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x