Published : 20 Feb 2021 12:20 PM
Last Updated : 20 Feb 2021 12:20 PM
உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தப்படும் வரை கரோனா முடிவுக்கு வராது என்று ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.
ஜி7 உறுப்பு நாடுகளுக்குகிடையேயான கூட்டமைப்பில் பேசும்போது மெர்க்கல் இதனை தெரிவித்தார்.
இதுகுறித்து ஜெர்மனி அதிபர் ஏஞ்சல்லா மெர்க்கல் கூறும்போது, “ உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்தை செலுத்தினால் மட்டுமே முடிவுக்கு கொண்டு வர முடியும். எனவே ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு கரோனா தடுப்பு மருந்து சென்றய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டமைப்பில் ஏழை நாடுகளுக்கு வழங்கவுள்ள கரோனா தடுப்பு மருந்து எண்ணிக்கை குறித்து விவாதிக்கவில்லை.
சீனாவை தொடர்ந்து, பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ், ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது.
இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன
இந்தநிலையில் பிரிட்டனில் பரவும் கரோனா வைரஸ் உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT