Published : 17 Feb 2021 03:12 AM
Last Updated : 17 Feb 2021 03:12 AM
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 15 நாடுகளில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 200 பேர் உயர்பதவிகளை வகித்து வருகின்றனர் என்று தெரியவந்துள்ளது.
அமெரிக்காவிலுள்ள இந்தியாஸ்போரா என்ற அமைப்பை நடத்தி வருபவர் எம்.ஆர்.ரங்கசாமி. இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். சிலிக்கான் பள்ளத்தாக்குப் பகுதியில் தொழில் நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
இந்நிலையில் உலகம் முழு வதும் பல்வேறு நாடுகளில் அரசிய லில், அரசுகளில் உயர்பதவி வகிக் கும் இந்திய வம்சாவளியினர் தொடர்பாக எம்.ஆர். ரங்கசாமி ஆய்வு நடத்தி அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட நாடுகளில் 200 இந்திய வம்சாவளியினர் உயர்பதவிகளை வகித்து வரு கின்றனர். இதில் 60 சதவீதம் பேர் கேபினட் அந்தஸ்தில் பதவிகளை வகித்து அதிகாரத்தில் உள்ளனர்.
அமெரிக்காவின் துணை அதிபராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் உள்ளார். இது இந்தியர்கள் பெருமைப்பட வேண்டிய விஷயமாகும். அவர் கள் அரசு தூதர்களாகவும், அரசி யல்வாதிகளாகவும், மத்திய வங்கிகளின் தலைவர்களாகவும் பதவி வகித்து வருகின்றனர். தற்போது நான் வெளியிட்டுள்ள புலம்பெயர்ந்த இந்தியத் தலைவர்கள் பட்டியலில் தற்போது 200 முக்கிய நபர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்தப் பட்டியலில் ஆசியாவுக்கான அமெரிக்காவின் வெளியுறவுத்துறை துணைக் குழுத் தலைவராக அமி பேரா, பிஜி நாட்டின் கல்வி, பாரம்பரியம், கலைத்துறை அமைச்சராக உள்ள ரோஸி அக்பர், கனடா நாட்டின் மேல் அவையில் உறுப்பினராக உள்ள ரத்னா ஓமிட்கர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமி பேரா கூறும்போது, “அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நீண்ட காலம் உறுப்பினராக உள்ளவன் என்ற பெருமை எனக்கு உள்ளது. அமெரிக்க வாழ்வு மற்றும் சமுதாயத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இந்திய-அமெரிக்கர்கள் உள்ளனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT