Published : 12 Feb 2021 11:02 AM
Last Updated : 12 Feb 2021 11:02 AM

மெக்சிகோவில் தொடரும் கரோனா பலி

மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,474 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

இதுகுறித்து மெக்சிகோ சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் 1,474 பேர் கரோனாவுக்கு பலியாகினர். இதனைத் தொடர்ந்து மெக்சிகோவில் கரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,71,234 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மெக்சிகோவில் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை 19 லட்சமாக உள்ளது. 15 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ், ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது.

இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன

இந்த நிலையில் பிரிட்டனில் பரவும் கரோனா வைரஸ் உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x